Thursday, October 30, 2014

மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது, பற்றுதலால் விருப்பமுண்டாகிறது, விருப்பத்தால் கோபம் உண்டாகிறது.

கோபத்தால் மயக்கம், மயக்கத்தால் நினைவு தவறுதல், நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்தி நாசத்தால் அழிகிறான்.

இதற்கு காரணம் மனிதன் தான் ஆத்மா என்பதை மறந்து தன் உடல்த் தான் நான் என்றும் தன் உடலை கொண்டு அனைத்தையும் செய்கிறான். அவன் நினைப்பது, பார்ப்பது, கேட்பது எல்லாம் தனக்கு கிடைக்கவேண்டும் என்று என்னுகிறான்.

அவன் எதிர்ப் பார்ப்பது சில சமயம் கிடைக்கும் சில சமயம் கிடைக்காது. இதனால் தன் உடலுக்கு எற்படும் பலன் (இன்பம் துன்பம், இலபம் நஷ்டம்) அனைத்தையும் தானக்கு வந்ததாக நினைக்கிறான். இதனால் அவன் புத்தி நாசம் அடைந்து கோபம் உண்டாகிறது.

இப்படி வாழும் மனிதர்களுக்கு கிடைக்கும் சுகம் உண்மையும் இல்லை நிரந்தரமும் இல்லை. 

ஒவ்வேறு மனிதனும் உலக போகங்களில் பற்றும் ஆசையும் இல்லாமால் தன் புலன்களை அடக்கி தான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவாக இருந்தல் தான் தனக்கு எது வந்தாலும் அதை சமாக எற்றுக் கொண்டு உண்மையன சந்தோஷத்தை அடைவான்..

No comments:

Post a Comment