Thursday, October 30, 2014

== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்:விஷ்ணு மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 30 கோடி தேவர்களும் விஷ்ணுவின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். விஷ்ணுவை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் விஷ்ணுவிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் விஷ்ணுவிடம் மிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் விஷ்ணு மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை விஷ்ணுவாள் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி விஷ்ணுவை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை. விஷ்ணு மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளது அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே நித்யமான ஆனந்தம்இஇருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான விஷ்ணுவிற்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.

No comments:

Post a Comment